Monday, January 6, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 19

கா வா வா கேசவா!


நாவால் வழுத்துவோம் நன்னடத்தை யாற்பணிவோம்
பாவால் வழுத்துவோம் பக்தியில் வெள்ளமென
மேவிப் பெருகும் விழிநீர் அருவியால்
தேவா நினதருட் பாதம் கழுவுவோம்
காவாவா கேசவா காகுத்தா தேவர்க்குச்
சாவா மருந்தைக் கொடுத்த சதுரனே!
மூவா தவனே! முதல்நடு பின்னான
ஓவா ஒளியே உகந்தேலோ ரெம்பாவாய்!    (பாடல்-19)

(சாயீசனைப் போற்றி) நாவால் வாழ்த்துவோம், அது போதாது, நல்ல நடத்தையால் அவனைப் பணிய வேண்டும்;

பாசுரங்களாலே வாழ்த்துவோம்; பக்தியினால் நமது கண்களில் அருவிபோலப் பெருகும் கண்ணீரால் உனது அருட்பாதங்களை நீராட்டுவோம்.

கேசவா, ராமச்சந்திர மூர்த்தியே, தேவர்களுக்கு அமுதத்தைக் கொடுத்த நீலகண்டனே, என்றைக்கும் மூப்படையாதவனே;

ஆரம்பமும், நடுவும் முடிவும் என்று எல்லாமுமான அழிவற்ற ஓளியே, எங்களைக் காக்க நீ வரவேண்டும்.

எம்மீது நீ அன்பு செலுத்தி அருள்வாயாக!

No comments:

Post a Comment