Friday, December 9, 2016

பர்த்தீசன் பாதாரவிந்த பதிகம் - 3

ஓம் ஸ்ரீ சாயிராம்

எளியார் உளார் இலாதார் 
  என்றேதும் பேதம் இலனாய்
அளியால் அனைவ ருக்கும் 
  அருள்செய்யும் அன்பு வடிவே
விளியாத முன்னம் வந்து 
  வீற்றாயே எங்கள் மனதில்
பளிங்கான பாதம் பணிவோம் 
  பர்த்தீச ஞான குருவே!

பொருள்:
இவன் எளியவன், இவன் செல்வந்தன், இவன் ஏழை என்பதாக எந்த வேறுபாடும் காண்பிக்காமல், பெருங்கருணையால் எல்லோருக்கும் ஒன்றுபோல அருள்செய்யும் அன்பின் வடிவானவனே! நாங்கள் உன்னை அழைப்பதற்கும் காத்திராமல் எங்கள் நெஞ்சில் வந்து நிறைந்துவிட்டாய். பர்த்தீசனான ஞானகுருவே, பளிங்குபோன்ற உன் பாதங்களைப் பணிகிறோம்.

No comments:

Post a Comment