Monday, January 23, 2017

பாதாரவிந்த பதிகம்-10



பத்தியால் மதுரன் சொன்ன
  பாதா ரவிந்த பதிகம்
நித்தமும் ஓதி னோர்க்கு
  நிலமீது நீடு வாழ்வு,
உத்தமச் செல்வம் மற்றும்
  ஒப்பரு முத்திய ருள்வன்
சத்திய சாயி தேவன்
  சத்தியம், அஞ்ச வேண்டா!

பொருள்:
பக்திபூண்ட மதுரபாரதியைக் கருவியாகக் கொண்டு அருளப்பட்ட இந்தப் பாதாரவிந்த பதிகத்தைத் தினந்தோறும் ஓதினோருக்கு, ஸ்ரீ சத்திய சாயி பகவான் நீண்ட ஆயுள், (குற்றமற்ற வழிகளில் வந்த) சிறந்த செல்வம், இவற்றுக்கும் மேலே ஒப்பில்லாத மோட்சத்தையும் அருளுவான். இது சத்தியம். அன்பர் அஞ்சவேண்டுவதில்லை!

குறிப்பு: பதிகம் என்பது 10 பாடல்களால் ஆனது. பத்தாவது பாடல் பலன்சொல்லும் பதிகமாக (பலச்ருதி) அமையவேண்டுமென்பது. மரபு. இத்துடன் ‘பாதாரவிந்த பதிகம்’ நிறைவு பெறுகிறது.   

No comments:

Post a Comment