Sunday, January 15, 2017

பர்த்தீசன் பாதாரவிந்த பதிகம்-6



மனிதர்போல் உடலெ டுத்து
  மனிதர்போல் உடையு டுத்து
மனிதர்போல் வார்த்தை சொல்லி
  மனிதர்போல் வாழு கின்றாய்!
புனிதர்கள் நின்னை யறிவார்
  பொறையிலார் அறிவ துண்டோ!
இனியநற் பாதம் பணிவோம்,
  பர்த்தீச ஞான குருவே!

பொருள்:
சாதாரண மானுடவுடலைத் தாங்கி வந்து, எங்களைப் போலவே ஆடையணிந்து, எங்களோடு உரையாடி, (மேலோட்டமாகப் பார்த்தால்) எம்போலவே வாழ்கிறாய்! புண்ணியம் செய்தோர் (புவிக்கு இறங்கிவந்த மெய்ப்பொருளே நீ என்கிற) நின் மெய்த்தன்மையை அறிவர். அதனை அறியுமளவுக்குப் பொறுமை இல்லாதவர்கள் இவ்வுண்மையை அறியவும் கூடுமோ! இனிமையே வடிவெடுத்த நின் பாதங்களைப் பணிகிறோம், பர்த்தியில் வந்து பிறந்த எமது ஞானகுருவே!

No comments:

Post a Comment