Monday, January 16, 2017

பர்த்தீசன் பாதாரவிந்த பதிகம்-7



ஓதா மறைகள் நவிலும் 
  ஒளிரா தொளிர்ந்த ஒளியே
சேதார மென்ப தில்லா
  செம்மைத்த முழுமை யுருவே
காதார நாமம் பாட
  களிப்பூறும் களியின் கருவே
பாதார விந்தம் பணிவோம்
  பர்த்தீச ஞான குருவே!

பொருள்:
எழுதிக் கற்கப்படாதவையான மறைகள், கண்ணாற் காணும் ஒளிக்கு அப்பாற்பட்ட நினது ஒளியைப் பேசுகின்றன. உனக்குச் சிதைவில்லை. நின்னுருவே செம்மையிலும் செம்மையான முழுமை. உனது நாமத்தைப் பாடிக் காதாரக் கேட்பின் உள்ளத்தில் ஊறும் களிப்பின் பிறப்பிடமானவனே, பர்த்தீசனான எமது ஞானகுருவே, உனது பாத கமலங்களைப் பணிந்தோம்.  

No comments:

Post a Comment