Wednesday, January 18, 2017

பர்த்தீசன் பாதாரவிந்த பதிகம்-8



வேதங்கள் கூறு வோனும், 
  விண்ணோர்கள் ஏத்து வோனும்
நாதங்கள் கூறு வோனும், 
  நல்லோர்கள் கூறுவோனும்,
ஏதங்கள் மாற்று வோனும், 
  எம்மோனும் நீயே பாபா!
பாதார விந்தம் பணிவோம்,
  பர்த்தீச ஞான குருவே!

பொருள்:
மிக உயர்ந்தனவாகிய நான்மறைகள் நின்னையே குறித்து நிற்கின்றன; வானவர்கள் உன்னப் போற்றுகின்றனர்; இசைப்பாடல்கள் உன் புகழையே இசைக்கின்றன; நல்லோர் உன் புகழைப் பேசுவதில் மகிழ்கின்றனர்; எங்கள் குற்றங்களைக் களைந்து எம்மை நீ மாற்றியமைத்துவிடுகிறாய்; உன்னையே நம்பும் எமக்கெல்லாம் ஒரே துணை நீதான் பாபா! பர்த்தியில் அவதரித்த ஞானகுருவாகிய உன் பாதத் தாமரைகளை நாங்கள் பணிகிறோம். 

No comments:

Post a Comment