Thursday, January 19, 2017

பர்த்தீசன் பாதாரவிந்த பதிகம்-9



வெயில்வீசு வதனம் காண்பார்
  விரிகேச மகுடம் காண்பார்
அயில்வீசும் விழியின் அழகில்
  அருள்வீச அன்பர் காண்பார்
துயில்மாயச் சொல்லும் உரையில்
  சுகபோத நிலையைக் காண்பார்
ஒயிலான பாதம் பணிவோம்
  பர்த்தீச ஞான குருவே!

பொருள்:

சூரியஒளியைச் சிந்துகின்ற நின் முகத்தினைக் காண்போர், அப்படியே நினது விரிந்து பரந்த சிகை ஒரு மகுடம்போலக் கவிந்திருப்பதையும் காண்பார்; வேல்போலக் கூர்த்த நின் விழிகளின் அழகில் பொங்கித் ததும்பும் கருணையையும் உனது அன்பர்கள் காண்பார்கள்; அஞ்ஞானமென்னும் உறக்கத்தை விட்டு எழுப்புவதாகிய நினது அருளுரையில், முழுஞானத்தின் சுகத்தையும் அவர்கள் காண்பார்கள். பர்த்தியில் அவதரித்த ஞானகுருவே, ஒயிலாக நடைபயிலும் நினது பாதத்தை நாங்கள் பணிகிறோம்.

No comments:

Post a Comment